Wednesday, June 10, 2009

மத்திய அரசு, யாரை ஏமாற்றுகிறது?

தமிழர்களுக்கு சட்டப்பூர்வ உரிமைகளை வழங்க இலங்கை அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங். (9 ஜுன்,2009)

இலங்கை தனது இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க வேண்டியது அதன் கடமை. நாம் தேவையெனில் ஆதரவளிப்போம். உதவிகளை வழங்குவோம். ஆனால், இது தான் தீர்வு, இதனை அமுல்படுத்துங்கள் என்று ஒருபோதும் வலியுறுத்த மாட்டோம். - இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன்(10 ஜுன் 2009).

என்ன நடக்கிறது இங்கே?இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் நடக்கும் ஆட்சியா?. அல்லது அதிகாரிகளால் தன்னிச்சையாக நடத்தப்படும் ஆட்சியா?.

ஏன் தமிழர்களால் மட்டும் மத்திய அரசையோ அதன் தமிழர் சார்ந்த முடிவுகளில் ஒரு அழுத்தத்தையோ, மாற்றத்தையோ கொண்டு வர முடியவில்லை?. தமிழக மக்களின் உணர்வுகள், யாரால் மட்டுப்படுத்தப் படுகிறது, குழப்பப்படுகிறது?.

த.கண்ணன்

No comments:

Post a Comment