Sunday, June 7, 2009

தற்போது இலங்கை அரசில், அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் சில.

1) திரு. இரகு குறிப்பிட்ட கட்டுரை, கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய நண்பரும் கட்டுரையாளருமான எல்.ஜெயசூர்ய என்பவரால் எழுதப்பட்டதாகும். இது அரசின் அதிகாரப் பூர்வமான இணையத் தளத்தில் வெளிவந்த செய்தி. (http://www.defence.lk/new.asp?fname=20090601_07)

2) "இந்தியாவால் வடிவமைக்கப்பட்ட அதிகாரப் பதிர்வுத் திட்டம், இலங்கைக்கு பொருத்தமானதல்ல" -ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சரத் என் சில்வா.

3) "ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல், 250,000 மக்களை மீட்டுள்ளோம். 20,000 படுகொலை பற்றிய, ஐ.நாவின் அறிக்கைக்கு, பதில் கூறப்போவதில்லை. அது ஒரு கற்பனையில் தயாரிக்கப்பட்டது." - வெளியுறவுத் துறை அமைச்சர், ரோஹித்த போகொல்லாகம. ஐ.நாவின் இந்தியாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி கோபிநாதன், இதற்கு ஆதரவாக, நவிப் பிள்ளையின் கருத்திற்கு எதிராக கூறியதை கவனிக்கவும்.

4) அதிகாரப் பகிர்வு என்ற போர்வையில் நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த அனைத்து கட்சிக் குழு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க.

5) "ராஜபட்சேவால், ஹம்சாவிற்கு வெகுமதியும் பரிசளிப்பும்" - (http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=51213)

6) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை என்ன வழியிலேனும் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்ற வேண்டுமென பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ

7) "தமிழர் கூட்டமைப்பை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்" ஜாதிக ஹெல உறுமய.

8) அனைத்துத் தமிழர்களும், பொது நீரோட்டத்தில் உள்ள, தேசியக் கட்சிகளில் இணைந்து செயல்பட வேண்டும். - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி & ஐக்கிய தேசியக் கட்சி. கருணா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அமைச்சர் பதவி. டக்ளசுக்கும் அழைப்பு. அனந்த சங்கரியும் இன்னும் சிலரும் தான் பாக்கி.

தமிழருக்கு அதிகாரம் எங்கு, எப்படி கிடைக்கும்?. யாரால் கிடைக்கும்?.

அதிகாரப் பகிர்வு பற்றி தற்போது பேசுவது, முகாம்களில் வசிக்கும் மூன்று லட்ச மக்களின் வாழ்வாதார்வப் பிரச்சனையைத் தட்டிக் கழிக்கும் உத்தியாகும்.

த.கண்ணன். - கருத்துப் பதிவு - "இலங்கையில் அதிகாரப் பகிர்வு: முதல்வரிடம் ப. சிதம்பரம் யோசனை " - தினமணி செய்தி - 7 ஜுன் 2009.

No comments:

Post a Comment