Friday, April 9, 2010

வாதப்பிரதிவாதக் கலை
எதிராளியின் வாதத்திலுள்ள விசயத்தை ஒரு குறிப்பிட்ட நோக்கமோ இயல்போ அல்லாத பொதுப்படையான கருத்தாக எடுத்துக்காட்ட வேண்டும்.அதே சமயம் நம்முடைய வாதத்தின் கருத்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குகளுக்குட்பட்டதாகவும்,ஏதேனுமொருசில நோக்கங்களையும் கருத்துக்களையும் கொண்டதாகவும் எடுத்துக் கூற வேண்டும்.ஏனெனில் வாதத்தில் ஒரு விசயம் எவ்வளவுக்கெவ்வளவு பொதுப்படையானதாகவும்,விசாலமானதாகவும் இருக்கிறதோ,அவ்வளவுக்கவ்வளவு அதற்குஆணித்தரமான எதிர்வினைகள் கிளம்பும்.வாதத்தில் நமது கருத்தையே சரியானதென்று நிரூபிக்க ஒரு சிறந்த உபாயம் கேள்வி கேட்டுக் கொண்டேபோவதாகும்.வாதத்துக்கு எடுத்துக்கொண்ட பொருளுக்குச் சிறிதும் தொடர்பில்லாத பல்வேறு விவகாரங்களையும் பற்றிக் கேள்வி மேல் கேள்விகேட்டு எதிராளியிடம் பதிலை வரவைக்க வேண்டும்.இதனால் எதிராளியுடைய சிந்தனை திசை மாறும்நம்முடைய வாதத்திலுள்ள பலவீனங்களைமறைத்துவிடுவதும் நமக்கு சாத்தியமாகும்.


வாதப்பிரதிவாதக் கலையில் எளிதில் வெற்றி பெறுவதற்கு இன்னொரு மார்க்கம்,எதிராளிக்கு ஆத்திரமூட்டுவதாகும்.சினம் மிகுந்தால் சிந்தனையின் போக்கு தடுமாறும்.கோபம் வந்துவிட்டால் நியான அநியாயங்களைப் பாகுபாடு செய்துபார்க்கும் மனத்தெளிவு அகன்றுவிடும்.அதன் காரணமாகத் தனக்கு சாதகமான கருத்துக்கள்ளை தேடிக்கண்டு பிடித்து விவாதம் செய்யும் சாதுரியத்தைஎதிராளி இழந்து விடுவான்.நாம் வலியுறுத்த வேண்டிய கருத்துக்கு மாறுபட்டதும் வேறுபட்டதுமானபிரச்சனைகளைப் பற்றி பேசுவதாலும்,கேள்வி எழுப்புவதாலும்,எதிராளி நாம் எந்தக் கருத்தை வலியுறுத்தப் போகிறோம் என்று புரியாமல் மனம்குழம்பிப்போவான்.அடிப்படைக் கருத்துக்குகந்த மறுப்புகளைக் கூறத் தன்னை தயார்படுத்திக்கொள்வதை தவற விடுவான்.அந்த நேரம் பார்த்து நமது கருத்தை திடீரென வலியுறுத்தினால் நாம் வெற்றிய்டையலாம்.


நமது கேள்விகளில் எதிராளியிடமிருந்து எந்த கேள்விகளுக்கு ஆமாம் என்கிற ஒப்புதலை எதிர்பார்க்கிறோமோ,அப்போதெல்லாம் இல்லை என்று பதில் வந்து கொண்டிருந்தால், உடனே நாம் கேள்விகளைநேர் மாறாக திருப்பிப்போட ஆரம்பித்துவிட வேண்டும்.நம்கருத்துக்குச் சாதகமான பதிலை வேண்டுவது போல,நாம் கேள்விகளைக் கேட்க வேண்டும்.இதன் மூலம் எதிராளியின் வாதங்களில் இருந்தே நமது வாதத்துக்கான ஆதாரங்களைப் பெற்று நாம் வெற்றியடைந்து விடலாம்.நமது கேள்விகளுக்கெல்லாம் சளைக்காமல் பதில்களைச் சொல்லிக்கொண்டே வந்த பின்னரும்,நமது கருத்தை வலியுறுத்துவதற்க்கான வாய்ப்பை எதிராளி தராமலே இருந்தாலுங்கூட,திடீரென நமது வாதம் வெற்றியடைந்து விட்டமாதிரி நமது கருத்தை வெளியிட்டு விடலாம்.எதிரி சங்கோஜியாகவோ,மந்தப்புத்தி உள்ளவனாகவோ இருந்து விட்டால் இந்த யுக்தி உடனுக்குடன் பலித்துவிடும்.


எதிராளி வலியுறுத்தும் கருத்துக்கு எதிரிடையான கருத்தை,எதிராளியின் செயல்களையும்,அவன் தன் கருத்துக்குச் சாதகமாக கையாண்ட எடுத்துக்காட்டுகளின் இதர அம்சங்களையும் வெளியிட்டு மடக்குவதாலும் நாம் வெற்றியடையலாம்.உதாரணமாக எதிராளிதற்கொலை புரிந்து கொள்வது நியாயமானதென்றோ, அதில் தவறில்லையென்றொ வலியுறுத்துவானேயானால்நாம் தொடுக்க வேண்டிய கேள்வி அப்படியானால்நீங்கள் ஏன் தூக்குப் போட்டுக்கொள்ளக் கூடாது?பெர்லின் மனிதர்கள் வாழ முடியாத ஒரு நகரம் என்று எதிராளி கூறினால்,உடனே நாம் நாளைக்கே முதல் வண்டி பிடித்து வேறெங்கேயாவது போய்ச்சேருவதுதானே என்று கேட்க வேண்டும்.


வாதத்தில் தோல்வியுண்டாகும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம்உடனே பேச்சைச் திசைமாற்றிவிட வேண்டும்.நமது வாதத்துக்கு தொடர்புடைய விசயத்தை பேசுவதுபோலவக்கனையாகவும்,விரிவாகவும்,நமது வாததிற்கு எந்தவகையிலும் தொடர்பில்லாத விவாகாரங்களைப் பற்றி பேசஆரம்பித்துவிட வேண்டும்.


வாதத்தில் நம் தரப்புக்குச் சாதகமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிஞர் பெருமக்களின் வாக்குக்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.ஏனெனில் எந்த கருத்தானாலும்,அதன் உட்பொருளை நோக்காமல் அந்த கருத்தை வெளியிட்டவரின் தகுதியையும்,திறமையையும்,பார்த்தே மேற்படி கருத்துக்கு மதிப்பளிப்பது மனித சுபாவம்.ஏதேனும் ஒரு விசயத்தை எடுத்துச் சொல்லி,சாக்ரடீஸே இதை வலியுறுத்திஇருக்கிறார் என்றோ,புத்தரின் போதனைகளின் முக்கியஅம்சமே இதுதான் என்றோ பெரியவர்களை துணைக்கு கூப்பிட்டால் எதிராளி அடங்கி போய்விடுவான்.எதிராளி எந்த அளவுக்கு சாத்திர அறிவு இல்லாமல் இருக்கிறானோ அந்த அளவுக்கு இந்த உபாயம் நமக்கு வெற்றி கொடுக்கும்.


எதிராளியின் கை ஓங்கும்போது தனிப்பட்ட முறையில் நேரடியானதாக்குதலில் இறங்குவதால் எதிராளியின் கவனத்தை திசைமாற்றி விடலாம்.இந்த யுகதியைகடைசி ஆயுதமாகத்தான் பயன்படுத்த வேண்டும்.விவாதத்துக்குறிய விசயத்தை விட்டு விட்டுஎதிராளியின் நடையுடை பாவனைகளைப் பற்றிய ஏளன விமர்சனத்தை மேற்கொள்ளும் இந்த உத்தி கீழ்த்தரமானது.ஆனால் இதுதான் மிக எளிதில் கைவரக் கூடியது.பெரும்பாலும் அனைவராலும் கையாளப்பட்டுவருவதும் இந்த உத்திதான்.இந்தத் தாக்குதலை ஜாடை மாடையாகவும் நகைச்சுவை வெளிப்படுபடியாகவும் பயன்படுத்த வேண்டும்.


இப்பொழுது பதிவுக்குள் வரலாம்.எதையாவது படிக்கலாம் என்றுபுத்தகங்களை புரட்டினேன்.நீண்ட காலத்துக்கு முன்பாகவே வந்து விட்ட சிந்தனையாளர் வரிசை நூல்களில் ஷோபன்ஹேர் என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் கிடைத்தது. நீட்ஷேயின் குரு என்று கேள்விபட்டது நினைவுக்கு வந்தது.படிக்க ஆரம்பித்தேன்.The art of controversy என்கிற தலைப்பில் ஷோபன்ஹேர் ஒரு புத்தகமே எழுதி இருக்கிறாராம்.அந்த புத்தகத்தை பற்றிய அறிமுகமாக குறிப்பிட்டுள்ள விசயங்கள்தான் நான் மேலே பதிந்திருப்பது.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்பதால் உடனே பதிவாக எழுதி பகிர்ந்துகொண்டு விட்டேன்.

நன்றி.
http://stalinguru.blogspot.com/
வாதப்பிரதிவாதக் கலை
எதிராளியின் வாதத்திலுள்ள விசயத்தை ஒரு குறிப்பிட்ட நோக்கமோ இயல்போ அல்லாத பொதுப்படையான கருத்தாக எடுத்துக்காட்ட வேண்டும்.அதே சமயம் நம்முடைய வாதத்தின் கருத்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குகளுக்குட்பட்டதாகவும்,ஏதேனுமொருசில நோக்கங்களையும் கருத்துக்களையும் கொண்டதாகவும் எடுத்துக் கூற வேண்டும்.ஏனெனில் வாதத்தில் ஒரு விசயம் எவ்வளவுக்கெவ்வளவு பொதுப்படையானதாகவும்,விசாலமானதாகவும் இருக்கிறதோ,அவ்வளவுக்கவ்வளவு அதற்குஆணித்தரமான எதிர்வினைகள் கிளம்பும்.வாதத்தில் நமது கருத்தையே சரியானதென்று நிரூபிக்க ஒரு சிறந்த உபாயம் கேள்வி கேட்டுக் கொண்டேபோவதாகும்.வாதத்துக்கு எடுத்துக்கொண்ட பொருளுக்குச் சிறிதும் தொடர்பில்லாத பல்வேறு விவகாரங்களையும் பற்றிக் கேள்வி மேல் கேள்விகேட்டு எதிராளியிடம் பதிலை வரவைக்க வேண்டும்.இதனால் எதிராளியுடைய சிந்தனை திசை மாறும்நம்முடைய வாதத்திலுள்ள பலவீனங்களைமறைத்துவிடுவதும் நமக்கு சாத்தியமாகும்.


வாதப்பிரதிவாதக் கலையில் எளிதில் வெற்றி பெறுவதற்கு இன்னொரு மார்க்கம்,எதிராளிக்கு ஆத்திரமூட்டுவதாகும்.சினம் மிகுந்தால் சிந்தனையின் போக்கு தடுமாறும்.கோபம் வந்துவிட்டால் நியான அநியாயங்களைப் பாகுபாடு செய்துபார்க்கும் மனத்தெளிவு அகன்றுவிடும்.அதன் காரணமாகத் தனக்கு சாதகமான கருத்துக்கள்ளை தேடிக்கண்டு பிடித்து விவாதம் செய்யும் சாதுரியத்தைஎதிராளி இழந்து விடுவான்.நாம் வலியுறுத்த வேண்டிய கருத்துக்கு மாறுபட்டதும் வேறுபட்டதுமானபிரச்சனைகளைப் பற்றி பேசுவதாலும்,கேள்வி எழுப்புவதாலும்,எதிராளி நாம் எந்தக் கருத்தை வலியுறுத்தப் போகிறோம் என்று புரியாமல் மனம்குழம்பிப்போவான்.அடிப்படைக் கருத்துக்குகந்த மறுப்புகளைக் கூறத் தன்னை தயார்படுத்திக்கொள்வதை தவற விடுவான்.அந்த நேரம் பார்த்து நமது கருத்தை திடீரென வலியுறுத்தினால் நாம் வெற்றிய்டையலாம்.


நமது கேள்விகளில் எதிராளியிடமிருந்து எந்த கேள்விகளுக்கு ஆமாம் என்கிற ஒப்புதலை எதிர்பார்க்கிறோமோ,அப்போதெல்லாம் இல்லை என்று பதில் வந்து கொண்டிருந்தால், உடனே நாம் கேள்விகளைநேர் மாறாக திருப்பிப்போட ஆரம்பித்துவிட வேண்டும்.நம்கருத்துக்குச் சாதகமான பதிலை வேண்டுவது போல,நாம் கேள்விகளைக் கேட்க வேண்டும்.இதன் மூலம் எதிராளியின் வாதங்களில் இருந்தே நமது வாதத்துக்கான ஆதாரங்களைப் பெற்று நாம் வெற்றியடைந்து விடலாம்.நமது கேள்விகளுக்கெல்லாம் சளைக்காமல் பதில்களைச் சொல்லிக்கொண்டே வந்த பின்னரும்,நமது கருத்தை வலியுறுத்துவதற்க்கான வாய்ப்பை எதிராளி தராமலே இருந்தாலுங்கூட,திடீரென நமது வாதம் வெற்றியடைந்து விட்டமாதிரி நமது கருத்தை வெளியிட்டு விடலாம்.எதிரி சங்கோஜியாகவோ,மந்தப்புத்தி உள்ளவனாகவோ இருந்து விட்டால் இந்த யுக்தி உடனுக்குடன் பலித்துவிடும்.


எதிராளி வலியுறுத்தும் கருத்துக்கு எதிரிடையான கருத்தை,எதிராளியின் செயல்களையும்,அவன் தன் கருத்துக்குச் சாதகமாக கையாண்ட எடுத்துக்காட்டுகளின் இதர அம்சங்களையும் வெளியிட்டு மடக்குவதாலும் நாம் வெற்றியடையலாம்.உதாரணமாக எதிராளிதற்கொலை புரிந்து கொள்வது நியாயமானதென்றோ, அதில் தவறில்லையென்றொ வலியுறுத்துவானேயானால்நாம் தொடுக்க வேண்டிய கேள்வி அப்படியானால்நீங்கள் ஏன் தூக்குப் போட்டுக்கொள்ளக் கூடாது?பெர்லின் மனிதர்கள் வாழ முடியாத ஒரு நகரம் என்று எதிராளி கூறினால்,உடனே நாம் நாளைக்கே முதல் வண்டி பிடித்து வேறெங்கேயாவது போய்ச்சேருவதுதானே என்று கேட்க வேண்டும்.


வாதத்தில் தோல்வியுண்டாகும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம்உடனே பேச்சைச் திசைமாற்றிவிட வேண்டும்.நமது வாதத்துக்கு தொடர்புடைய விசயத்தை பேசுவதுபோலவக்கனையாகவும்,விரிவாகவும்,நமது வாததிற்கு எந்தவகையிலும் தொடர்பில்லாத விவாகாரங்களைப் பற்றி பேசஆரம்பித்துவிட வேண்டும்.


வாதத்தில் நம் தரப்புக்குச் சாதகமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிஞர் பெருமக்களின் வாக்குக்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.ஏனெனில் எந்த கருத்தானாலும்,அதன் உட்பொருளை நோக்காமல் அந்த கருத்தை வெளியிட்டவரின் தகுதியையும்,திறமையையும்,பார்த்தே மேற்படி கருத்துக்கு மதிப்பளிப்பது மனித சுபாவம்.ஏதேனும் ஒரு விசயத்தை எடுத்துச் சொல்லி,சாக்ரடீஸே இதை வலியுறுத்திஇருக்கிறார் என்றோ,புத்தரின் போதனைகளின் முக்கியஅம்சமே இதுதான் என்றோ பெரியவர்களை துணைக்கு கூப்பிட்டால் எதிராளி அடங்கி போய்விடுவான்.எதிராளி எந்த அளவுக்கு சாத்திர அறிவு இல்லாமல் இருக்கிறானோ அந்த அளவுக்கு இந்த உபாயம் நமக்கு வெற்றி கொடுக்கும்.


எதிராளியின் கை ஓங்கும்போது தனிப்பட்ட முறையில் நேரடியானதாக்குதலில் இறங்குவதால் எதிராளியின் கவனத்தை திசைமாற்றி விடலாம்.இந்த யுகதியைகடைசி ஆயுதமாகத்தான் பயன்படுத்த வேண்டும்.விவாதத்துக்குறிய விசயத்தை விட்டு விட்டுஎதிராளியின் நடையுடை பாவனைகளைப் பற்றிய ஏளன விமர்சனத்தை மேற்கொள்ளும் இந்த உத்தி கீழ்த்தரமானது.ஆனால் இதுதான் மிக எளிதில் கைவரக் கூடியது.பெரும்பாலும் அனைவராலும் கையாளப்பட்டுவருவதும் இந்த உத்திதான்.இந்தத் தாக்குதலை ஜாடை மாடையாகவும் நகைச்சுவை வெளிப்படுபடியாகவும் பயன்படுத்த வேண்டும்.


இப்பொழுது பதிவுக்குள் வரலாம்.எதையாவது படிக்கலாம் என்றுபுத்தகங்களை புரட்டினேன்.நீண்ட காலத்துக்கு முன்பாகவே வந்து விட்ட சிந்தனையாளர் வரிசை நூல்களில் ஷோபன்ஹேர் என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் கிடைத்தது. நீட்ஷேயின் குரு என்று கேள்விபட்டது நினைவுக்கு வந்தது.படிக்க ஆரம்பித்தேன்.The art of controversy என்கிற தலைப்பில் ஷோபன்ஹேர் ஒரு புத்தகமே எழுதி இருக்கிறாராம்.அந்த புத்தகத்தை பற்றிய அறிமுகமாக குறிப்பிட்டுள்ள விசயங்கள்தான் நான் மேலே பதிந்திருப்பது.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்பதால் உடனே பதிவாக எழுதி பகிர்ந்துகொண்டு விட்டேன்.

நன்றி.
http://stalinguru.blogspot.com/

Monday, March 29, 2010

ஆனந்த விகடனில் வந்த ஆனைமுத்து வெளியிடும் பெரியார் தொகுப்பு பற்றிய கட்டுரைக்கு, பெரியார் பற்றிய பின்னூட்டதிற்கு எதிர்வினை.

ஆச்சாரியார்களும், ஜீயர்களுக்கும் வக்காலத்து வாங்குவது?. புரிகிறது .. நீங்கள் யார் என்று .. 100 நாள் வேலைத் திட்டத்தில் அதே வேலையைத்தான் பார்க்கவேண்டுமா?. எந்த வேதத்தில் உங்களின் கடல் கடந்த பயணம் புனிதமாக்கப்பட்டது ?.... நித்யானந்தா அப்புறம் தேவநாதன், சங்கராச்சாரி எல்லாம் யாரால்? .. அனுராதா ரமணன் கூறிய குற்றச்சாட்டு என்னவாயிற்று? .. இப்போது கூட ராமகோபலனும் பிஜபியும் தான் நித்யானந்தாவுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் .. எந்த பெரியாரிஸ்ட்டும் வாதாடவில்லை.

அடேயப்பா வந்துட்டாங்கையா! ஆகாசப்புளுகு மூட்டைகாரர்கள்! இந்து மதம் தான் தேசிய ஒருமைபாட்டுக்கு உறுதுணையாக இருக்கிறதாம். அப்போ மகாராஷ்ட்ராவில் MNS, ம் ம் அடித்துகிறாங்க RSS? .. ஏன் நேபால் இன்னும் தனி நாடாக இருக்கிறது? இந்தியாவில் இணைக்க வேண்டியது தானே? உதைப்பான் ..

கும்பமேளாவில் தங்களின் "பாவங்களைத்" தொலைக்க முழுக்குப் போட வரும் சங்கராச்சாரிகளுக்கு உத்தர்காண்ட் மாநில அரசு, அவர்கள் முகாம்களை அமைத்துக் கொள்ள நிலங்களை ஒதுக்கி வருகிறது. இதில், காஞ்சி மடம் உள்ளிட்ட போலி சங்கராச்சாரி மடங்களுக்கு, அரசு நிலம் ஒதுக்கீடு செய்யக் கூடாது என்று துவாரகா பீட சங்கராச்சாரியும், அவருடன் வந்துள்ள "சாதுக்களும்" எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காஞ்சி சங்கராச்சாரி போன்ற போலிகளுக்கு, நிலம் ஒதுக்கப்படுவதை எதிர்த்து, தீக்குளிக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளனர். இதற்கு கும்பமேளா நிர்வாகத்தின் கூடுதல் அதிகாரி, வி. எஸ். தனிக் என்பவர் உத்ரகாண்ட் அரசு சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், ஆதி சங்கரர் நிறுவிய மடமாக காஞ்சி மடம் உள்ளிட்ட போலி மடங்களை அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், பத்ரிநாத், பூரி, துவாரகா மற்றும் சிருங்கேரி மடங்களை மட்டுமே அங்கீகரித்துள்ளது. அவர்களுக்கு மட்டுமே அரசு அனைத்து வசதிகளையும் செய்து தரும் என்றும் பதில் கூறியுள்ளார்.

/ / ராமகோபாலனும், சங்காராச்சாரியாரும், பி.ஜெ. பியும் தான் இந்து மதத்தின் பிரதிநிதிகள், அடையாளம் என்று நீங்கள் நினைப்பதைப் போல் ஒரு முட்டாள்த்தனம் ஏதுமில்லை / / .. இங்க பாரடா .. .. புது உண்மையை சரி இந்து மதத்தின் பெருமை சாதாரண பக்தர்களிடம் உள்ளது என்றால், எதற்கு சிறப்பு தரிசன வழி, கோடிக்கணக்கில் பணம் புரளும் வியாபார யுக்திகள்? .. அங்கு விழும் பணமெல்லாம் வரி ஏய்ப்பு பணம் .. ஏழுமலையான் அதையெல்லாம் கண்டு கொள்ளமாட்டார். இருந்தால் தானே கேட்பதற்கு.

எப்படி ராமகோபாலனும், சங்காராச்சாரியாரும், பி.ஜெ. பியும் இந்து மதத்தின் அடையாளம் இல்லை என்று சொல்லுகிறீர்களோ, அதே போல் தான் திராவிட கட்சி தலைவர்களும் அதன் சார்ந்த ஆட்சியும், பெரியார் தத்துவத்தின் அடையாளங்கள் அல்ல.

/ / தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறிதற்கு காரணம், ஊரெங்கும் பள்ளிகள் கட்டிய காமராஜரும், இடஒதுக்கீடு பெற்றுதந்த பெரியவர்களும்தான். / / .. இடஒதுக்கீடு பெற்றுத் தந்த பெரியவர் பெரியார் தான். இடஒதுக்கீடு கொள்கையின் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு.

/ / ஸ்ரீநிவாஸ், முரன்பாடுகளின் முழுவடிவம்தான் பெரியார். / /. பெரியார் செய்தால் அது முரண்பாடு. கோல்வல்கர் செய்தால் அது தேசத் தொண்டா? .. 0 கம்யூனிஸ்ட் முற்போக்கு முகமூடி அணிவீர். ஆனால், சங்கரச்சரியை ஓடிப் போய், மீட்டு வருவீர். தேவானதனைப பற்றி பேசினால் பாதிரியாரைப் பற்றி திசைத் திருப்புவீர். உங்கள் நேர்மை, புனிதம், ஜனநாயகம் எல்லாம் எப்படிபட்டது & எதனுடன் தொடர்புடையது என்று நல்லாவேத் தெரியும்.

70 அல்ல 700 Volumetric போட்டாலும் தகும். கண்டிப்பாக படிப்போம் ... ஸ்ரீநிவாஸ் இப்படி மேலோட்டமாக பேசி பேசி தமிழ் நாட்டில் பெரியாரை பெயர்த்தெடுக்க கடு முயற்சி செய்தனர் ராமகோபலனும், இல கணேசனும் சோவும். ஒன்னும் செய்ய முடிய வில்லை. கடைசியில் வழக்கமான பாணி தான். சமரசம் .. சாஷ்டங்கமா விழுந்தாச்சு. "பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை தவிர்த்து அனைத்து கருத்துக்களும் சீர்திருத்த கருத்துக்களே" - இல கணேசன். எப்படியோ பெரியாரை, பெரியாழ்வாராக (2) மாற்றாமல் இருந்தால் சரி.

/ / இத்தனையும் செய்த கொடுர சிங்களவர்களை ஐநாவில் வைத்து இந்தியாவே காப்பாற்றியது .......... இந்தியாவே எமது முதன்மை எதிரி / / விகடன் நெறியாளர் என்ன தூங்குகின்றார்களா? ... ஐயோ, ஏன் இந்த சோ கூப்பாடு? .. இந்தியா உதவி செய்ததைப் பற்றி பக்கம் பக்கமா ஆதாரங்களுடன் நிரூபித்தாயிற்று. ராஜபக்சே ஆம் என்றான். மன்மோகன் சிங் மறுக்கவில்லை. ஐ. நா விஜய் நம்பியாரின் நேர்மையை, இந்தியச் சார்பை இன்னர் சிட்டி pressure தொடர்ந்து அம்பலபடுத்தி வருகிறது. இந்து என்கிறீர்! அப்போ அங்கே இறந்தவர்கள் யார்? .. கொன்றவர் யார்? .. கொல்ல உதவியது யார்? .. காஷ்மீர் பண்டிட் சிறு காயம் பட்டால் மட்டும் பதறுகிறீர்? .. என்னையா உங்க நேர்மை, ஜனநாயகம், நாட்டுப்பற்று?

வைக்கம் தொடங்கி 1940 களில் நடத்திய துப்புரவு தொழிலாளர் மாநாடு, தீண்டாமை எதிர்ப்பு மாநாடு என இறுதி வரை எண்ணிலங்கா போராட்டங்கள் நடத்தியுள்ளார். வகுப்புவாரி பிரநிதித்துவம் என்கிற கொள்கையை முதலில் காங்கிரஸ் - க்கும் நீதிக்கட்சிக்கும் சேர்த்த பரிந்துரைத்தார். ஆனால் காங்கிரஸ் மறுத்தது. வகுப்புவாரி பிரநிதித்துவம் என்பது அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரும் உள்ளடங்கியதே .... ஆமாம் Rengasubramani நீங்கள் தான் தலித் இல்லையே. எதற்கு முதலை கண்ணீர்?. இந்த சமுகத்தில் கீழ் சாதி என்ற பிரிவை ஏற்படுத்தியவர் யார்? . உங்கள் அதிகாரத்தில் இருக்கும் கருவறைக்கு அழைத்து செல்லுங்களேன்? .. இந்தியா முழுக்க இருக்கும தலித் இயக்கங்கள் அனைத்தும் அம்பேத்கர் படத்துடன் பெரியார் படத்தையும் இணையாக வைப்தே இதற்க்கு சாட்சி.


நேற்று வரை இந்து பாச மழை பொழிந்தீர்கள். எப்போ நீங்கள் எல்லாம் தீடீர் என்று தமிழர்கள் ஆனீர்கள்:?.. எங்களுக்கு ஆச்சாரியரும், பாதிரியாரும் ஒன்று தான். .. தமிழ் நாட்டின் சமுதாய ஆபரேஷன் பற்றி ஆராய்பவர்களே!!. ..பிஜேபி மற்றும் இந்து சார்பு கட்சி ஆண்ட மாநிலங்களில் ஆபரேஷன் ரிசல்ட் என்ன? .. ஒன்றும் வேண்டாம் காஞ்சி மடத்தில் ரிசல்ட் என்ன?

பெரியார் பற்றிய விமர்சனங்கள் என்பது வேறு; அவதூறு என்பது வேறு; இப்போதைக்கு இங்கு அவரைப்பற்றி யார் எதனால் சொல்கிறார்கள் என்பதே முக்கியம்.

Tuesday, March 16, 2010

தோழன் லெப்.கேனல் அமுதாப்

போர் நிறுத்த உடன்பாடு சிங்கள படைகளால் மீறப்பட
ஆரம்பித்த காலத்தில் சார்லஸ் ஆன்டனி சிறப்பு படை
அணிகளின் தளபதி தோழன் லெப்.கேனல் அமுதாப்
தனது போராளிகளிடம்
பேசியபோது சொன்ன கருத்துக்கள்தான் அவைகள்.
நாங்கள் போரை விரும்பவில்லை,எங்களுக்கு இரத்த
வெறியில்லை.இறந்த உடல்களை,சிதைந்த மனித
உயிர்களை தூக்கிச் சுமப்பதை நாங்கள் வெறுக்கிறோம்.
உயிர்களைப் பறிப்பது எங்களுக்கு உவப்பானதாக
இல்லை.ஆனாலும் எங்கள் மண் மீது மீண்டும்
ஆக்கிரமிக்கப்பு போர் திணிக்கபடும்போது ஒவ்வொரு
அடி மண்ணுக்காவும் நாங்கள் கடைசி மூச்சுவரை
போராடுவோம்.

Tuesday, December 15, 2009

சியோனிஸ்டுகளும், இஸ்ரேலும் - சில குறிப்புகள்

யூதர்களுக்கும் தமிழர்களுக்கும் நிறைய விடயங்களில் அடிப்படைகள் ஒன்றாகஇருப்பதாகவும், யூதர்கள் போல் நமக்கும் ஒரு நாடு, கால இயக்கத்தில்கிடைத்து விடும் என்றும நம்மில் பலரும் நம்புவதுண்டு.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1630:2009-12-14-01-43-37&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

ஆனால், யூதர்கள் அதற்காக முன் எடுத்த முயற்சிகள் வியக்க வைக்கிறது.ஒவ்வொரு தமிழனும் படித்து பிறகு மனதுக்குள் இருத்தி வைக்க வரலாற்றுப்பதிவு.

Thursday, December 10, 2009

சீமானைப் பற்றி எனது கருத்து:
1) சீமான், ஒரு கருணாநிதி போலவோ, திருமா போலவோ வர வேண்டாம். ஒரு எம்ஜிஆரைப் போல் வரட்டுமே.
2) விஜயகாந்தின் தமிழ் சார்பற்ற வெகுசன அரசியலுக்கு எதிராக சீமான் அரசியல் இருக்கட்டுமே.

Friday, July 17, 2009