தமிழரின் உயிர், வாழ்க்கை, தீர்வு என அத்தனையும் உலக நாடுகளின் பூகோள அரசியலின் விளையாட்டில் சிக்கி சின்னா பின்னமாகி விட்டது. இலங்கையின் குள்ள நரி வலையில் இந்தியா விழுந்து விட்டது. பலன் விரைவில் சீனா வழி வர இருக்கிறது. அப்போது, நாராயணனும், மேனனும், நம்பியாரும் இருக்க போவது இல்லை. காலம் ஒரு நல்ல நிலை கண்ணாடி. வரலாறும், காலமும் இந்த உலகின் பாரா முகத்தை, இழி செயலை பார்த்துக் கொண்டிருக்கிறது. வன்னி நிலமும் மக்களும் இனி இந்த உலகை, இந்தியாவை, இந்தியத் தமிழ் அரசியல் வாதிகளை நம்பப் போவது இல்லை. ஒன்று மட்டும் உறுதி. இனி பிறக்கும் ஈழ அரசியல் போர், பிறரின் அல்லது பிற இனத்தின் அழிவைக் கண்டு இரக்கப் படப் போவது இல்லை. மனிதாபிமானத்தை பார்க்க போவதில்லை.
கருணா, டக்லஸ் தேவானந்தா, பிள்ளையான்,ஆனந்தசங்கரி இன்னும் எத்தனையோ பேர். முப்பது ஆண்டு வரலாற்றில் ஒரு சிறிய தீர்வை கூட இப்படிப் பட்டோரால் சிங்கள அரசிடம் வாங்க முடியவில்லை. தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு எப்படி தில்லியோ, அவர்களுக்கு கொழும்பு அப்படி. இவர்களுக்கு புலிகளும், பிரபகாரனும் தான் கண்ணுக்கு உறுத்தல். இப்போது பார்போம் என்ன செய்யப் போகிறார்கள் என்று
இந்திய சகோதரர்களே, நினைவில் வையுங்கள். கிளிநொச்சியில் ஒவ்வொரு நாட்டின் Embassy க்கும் இடம் அமைய விருந்தது. நேற்று அந்த நிலம் ஒரு நெற்களஞ்சியம்,ஆனால் இன்று, அந்நிலதவர்கள் சோற்றுக்கு கையேந்தும நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
13 - ஆம் அட்டவணையில் ஒரு எழுத்தை கூட திருத்த கூட அனுமதிக்க மாட்டோம் என்று JVP, புத்த பிக்குகள் மற்றும் இனவாத கட்சிகள் கூறி விட்டன. அதிகார பகிர்வுக்கு அடிப்படை இந்த அட்டவணை தான்
த. கண்ணன் - 29 May 2009 -
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment