Saturday, May 30, 2009

இந்திய இறையாண்மையாளர்களே, சிங்கள வருடிகளே, சிங்களத்தை வணங்கும் முடிகளே, இலங்கை தேசப்பற்றாளர்களே, சோனியாவின் மாந்தர்களே, சொரணை கெட்டு சுயமரியாதை தொலைத்த உடன்பிறப்புகளே, அம்மா கழக அடிப்பொடிகளே, தமிழர் பிரச்சனை இன்று உலக அரங்கிற்கு சென்று விட்டது. உலகின் மிக முக்கியமாக விவாதிக்கப்படும் பிரச்சனையாக உரு மாறி விட்டது. புலம் பெயர்ந்த தமிழர் ஈழம் நோக்கிய சரியான அரசியலை முன் எடுக்க ஆரம்பித்து விட்டனர்.

புலிகளின் வீழ்ச்சி, பல லட்ச தமிழரிடையே தம் இருப்பைப் பற்றியும், தம் வரலாற்றுக் கடமையைப் பற்றியும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி, ஈழ விடுதலை, ஒரு மக்கள் போராட்டமாக வடிவு கண்டு வருகிறது.

இந்திய, சீனா ஆதிக்கப் போட்டி, மனித படுகொலையை மறைக்க ஆசிய பிரச்சனையாக்கிய இலங்கை அரசு என பல விடயங்கள், மேற்க்கு உலகை வன்மம் கொள்ள வைத்து உள்ளது. இந்த மாற்றம் இனி பல வழிகளில் இலங்கையை பாதிக்க உள்ளது.

த.கண்ணன்.

No comments:

Post a Comment